தண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்
Recommended Video
சென்னை: ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் 4 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதில் தவறு ஏதும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடக்காத வகையில் திமுக தடுத்தது. திமுக தோல்வி பயத்தின் காரணமாக செய்கிறார்களா இல்லை வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை.
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தேர்தல் நடக்கும் என்று சொல்லி உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதிமுகவுடனான கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

என்கவுன்ட்டர்
அதிமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேச தேமுதிக குழு அமைத்து உள்ளது. அது போல் அதிமுகவும் குழு அமைத்தபின் அந்த குழுவுடன் பேசி எந்தந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்வோம். தெலுங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது.

நீதி
இது போன்று கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் என்ற நிலை வரும். யார் தவறு செய்தாலும் தண்டனைக்குரியவர்கள் தான். யார் தவறு செய்தாலும் ஒரே நீதியுடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு
வெங்காயம் விலை உயர்வு கடுமையாக உள்ளது. ஒரு சீசனில் வெங்காய விலை உயரும் மற்றொரு சீசனில் வெங்காய விலை இல்லாமல் இருக்கும். வெங்காய விலை உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பாக உள்ளது.

குறைந்த விலையில் வெங்காயம்
இதை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications