தண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்
Recommended Video
சென்னை: ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் 4 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதில் தவறு ஏதும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை செல்லும் முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடக்காத வகையில் திமுக தடுத்தது. திமுக தோல்வி பயத்தின் காரணமாக செய்கிறார்களா இல்லை வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை.
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தேர்தல் நடக்கும் என்று சொல்லி உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதிமுகவுடனான கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

என்கவுன்ட்டர்
அதிமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து பேச தேமுதிக குழு அமைத்து உள்ளது. அது போல் அதிமுகவும் குழு அமைத்தபின் அந்த குழுவுடன் பேசி எந்தந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதை முடிவு செய்வோம். தெலுங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தவறு கிடையாது.

நீதி
இது போன்று கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் என்ற நிலை வரும். யார் தவறு செய்தாலும் தண்டனைக்குரியவர்கள் தான். யார் தவறு செய்தாலும் ஒரே நீதியுடன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு
வெங்காயம் விலை உயர்வு கடுமையாக உள்ளது. ஒரு சீசனில் வெங்காய விலை உயரும் மற்றொரு சீசனில் வெங்காய விலை இல்லாமல் இருக்கும். வெங்காய விலை உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பாக உள்ளது.

குறைந்த விலையில் வெங்காயம்
இதை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications