அடுத்த டார்கெட் தியாகராஜன்.. நடுராத்திரி என் ரூம் கதவை தட்டினார்.. இளம்பெண் பகீர்
நடிகர் தியாராஜன்மீது பெண் போட்டோகிராபர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சென்னை: மீ டுவில் இப்போது அடுத்த டார்கெட் நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் மீதுதான் விழுந்திருக்கிறது.
வைரமுத்து தொடங்கி ஏராளமானோர் மீ டூ என்ற வலைதளத்தில் சிக்கி பரபரப்பாகி வருகிறார்கள். இப்படி நாள்தோறும் ஒவ்வொரு பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு கொண்டிருப்பதால் தமிழ்திரையுலகமே பரபரப்பாகி உள்ளது.
பொன்னர் சங்கர்
நேற்றுகூட நடிகர் அர்ஜூன் மீது இதே பாலியல் குற்றச்சாட்டினை ஒரு பெண் சுமத்தினார். அந்த வரிசையில் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் மீது புகார் எழுந்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் உருவான பொன்னர் - சங்கர் படத்துக்கு தியாகராஜன்தான் இயக்குனர். அந்த படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் இந்த குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.

தாய் மசாஜ்
அவரது பெயர் பிரித்திகா மேனன் என்பது. இவர் மீ டூ ஹேஷ்டேக்கில், "இளம்பெண்கள் தமக்கு தாய் மசாஜ் செய்ததாக கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் தியாகராஜன் காட்டியதாகவும், அந்த பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக அவர் தன்னிடம் சொன்னதாகவும் பிரித்திகா மேனன் தெரிவித்துள்ளார். அப்படி டைரக்டர் தன்னிடம் சொல்லும்போது, தனக்கு உடம்பெல்லாம் கூசியதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐஸ்வர்யா ராய்
மேலும் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து நள்ளிரவில் வந்து கதவை தட்டினார். இதனால் தான் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் பிரித்திகா மேனன் கூறியுள்ளார். மேலும் ஷூட்டிங் சமயத்தில் ஆபாசமாகவும் பேசுவார், உன்னை அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன் என்று பலமுறை கேட்டுள்ளார். நான் மறுத்துவிட்டேன் என்றும் அப்பெண் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள்..
ஒருநாள் தனக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது, என் ரூமுக்கு வா, பிராந்த தருகிறேன் என்று தியாகராஜன் சொன்னதும், பயந்து தன் அறைக்கு ஓடிப்போய் கதவை சாத்தி கொண்டாராம். இந்த கருத்துக்களை எல்லாம் பிரித்திகா மேனன் பதிவிட்டுள்ளார்.

ஆதாரம் காணோம்
சின்மயியை தொடர்ந்து ஏராளமானோர் இந்த மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை பெண்களின் துணிச்சலான, தைரியமான செயல் என்று ஒருபக்கம் பார்த்தாலும், மற்றொரு பக்கம் அவற்றிற்கான ஆதாரம் ஒன்றைக்கூட இதுவரை காணோம் என்பதுதான் உ ண்மை.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications