சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வந்தார் பிரதமர் மோடி... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி சென்னை வந்தார்.

Recommended Video

    #BREAKING சென்னை வந்தார் பிரதமர் மோடி!

    சென்னை விமான நிலையத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    Prime Minister Modi arrived in Chennai to launch various completed projects and lay the foundation for new projects

    பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.பிரதமர் மோடி இன்று காலை 10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்கின்றனர்.

    அதன்பிறகு நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ரூ4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையேயான 4-வது ரயில் பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் .

    Prime Minister Modi arrived in Chennai to launch various completed projects and lay the foundation for new projects

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் டாங்கியை தேசத்துக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. இந்திய தொழில்நுட்ப கழகத்தின் டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். கல்லணை கால்வாய் சீரமைப்பு-புதுப்பித்தல் திட்டத்துக்குஅவர் அடிக்கல் நாட்டுகிறார்.சென்னையில் காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
    பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

    English summary
    Prime Minister Modi arrived in Chennai to launch various completed projects and lay the foundation for new projects
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X