தாம்பத்ய உரிமைக்காக.. கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க ஹைகோர்ட் மறுத்துள்ளது
சென்னை: தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் சிறையில் உள்ளார்.. இவரது கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி, அவரது மனைவி, சென்னை ஹைகோரட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதற்கு முன்பு விசாரித்தது.. இது தொடர்பாக தொடர்ந்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

கருத்தரிப்பு
கருத்தரிப்பு சிகிச்சைக்காக, இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், 2 முறையாக மனுத் தாக்கல் செய்து உள்ளதாகவும், தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்பதால், இது குறித்து விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, 2019 ம் ஆண்டு உத்தரவிட்டது.

கைதி
இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.. இன்று அதற்கு தீர்ப்பும் தரப்பட்டுள்ளது.. அதன்படி, தண்டனைக் கைதி ஒருவர், சாதாரண பொது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்க முடியாது
அப்படி அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்திய நீதிபதிகள், கைதிகளுக்கு தாம்பத்ய உரிமையை வழங்க முடியாது என்று தன்னுடைய தீர்ப்பில் திட்டவட்டமாக தெளிவுபடுத்தி உள்ளனர்.

சூழ்நிலைகள்
அசாதாரண காரணங்களுக்காக மட்டுமே பரோல் வழங்க விதிகள் உள்ள நிலையில், குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம் என்றும், ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் இந்த காரணத்தை கூறி பரோல் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications