தாம்பத்ய உரிமைக்காக.. கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க ஹைகோர்ட் மறுத்துள்ளது
சென்னை: தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் சிறையில் உள்ளார்.. இவரது கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி, அவரது மனைவி, சென்னை ஹைகோரட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதற்கு முன்பு விசாரித்தது.. இது தொடர்பாக தொடர்ந்து மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

கருத்தரிப்பு
கருத்தரிப்பு சிகிச்சைக்காக, இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், 2 முறையாக மனுத் தாக்கல் செய்து உள்ளதாகவும், தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்பதால், இது குறித்து விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, 2019 ம் ஆண்டு உத்தரவிட்டது.

கைதி
இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.. இன்று அதற்கு தீர்ப்பும் தரப்பட்டுள்ளது.. அதன்படி, தண்டனைக் கைதி ஒருவர், சாதாரண பொது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்க முடியாது
அப்படி அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்திய நீதிபதிகள், கைதிகளுக்கு தாம்பத்ய உரிமையை வழங்க முடியாது என்று தன்னுடைய தீர்ப்பில் திட்டவட்டமாக தெளிவுபடுத்தி உள்ளனர்.

சூழ்நிலைகள்
அசாதாரண காரணங்களுக்காக மட்டுமே பரோல் வழங்க விதிகள் உள்ள நிலையில், குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம் என்றும், ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் இந்த காரணத்தை கூறி பரோல் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications