பிரபல தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் மோதல்.. மாணவர் காயம்.. போலீசார் விசாரணை!
சென்னை: சென்னையை அடுத்த பொத்தேரியில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள பொத்தேரியில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு திடீரென மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் விஷால் என்ற மாணவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் மோதலில் ஒருவர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications