Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஞானவேல் ராஜாவின் பாஜக ஆதரவு.. மோடிக்கு புகழ் மழை! இந்தி எதிர்ப்பு கட்சிகள் மீது அட்டாக்! FLASH BACK

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமீருக்கு எதிராக பேசி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 2019 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை ஆதரித்தும், பிரதமர் மோடியை பாராட்டியும் அரசியல் பேசிய செய்தி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

பருத்தி வீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான மோதல் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கார்த்தி 25 பட விழாவுக்கு அமீர் வராதது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், இந்த படத்தால் தனக்கு 2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை குற்றம் சுமத்தினார். இதற்கு பதிலளித்து பேட்டியளித்த ஞானவேல் ராஜா, அமீரை திருடன் என்றும், சினிமா எடுக்கத் தெரியாது என்றும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Producer Gnanavel Raja praised PM Modi and supported Hindi imposition

ஞானவேல் ராஜாவின் இந்த கருத்துக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன் அமீருக்கு ஆதரவாக கருத்திட்டு இருந்தனர். நாளுக்கு நாள் ஞானவேல் ராஜாவுக்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் மீதும் பலர் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இந்த நிலையில்தான் இன்று ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், "'பருத்தி வீரன்' பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி சர்ச்சைக்குள் சிக்கி இருக்கும் ஞானவேல் ராஜா, ஒரு நிகழ்வில் பிரதமர் மோடியையும், இந்தி மொழி கற்பதை ஆதரித்தும் பேசிய செய்தியும், புகைப்படங்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா கோவையில் நடைபெற்றது. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பங்கேற்ற இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

Producer Gnanavel Raja praised PM Modi and supported Hindi imposition

அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாட்டில் இதை அரசியலாக்குகிறார்கள். பொதுவான மொழி என ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழியால் மற்றொரு மொழி அழியும் என ஒரு கும்பலால் தவறான பிரச்சாரம் இங்கு பரப்பப்படுகிறது. 90 சதவித தமிழர்களுக்கு இந்தி தெரியாததாலேயே மத்திய அரசின் திட்டங்களை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மொழியும் இதற்கு ஒரு காரணம்.

நான் பிரதமர் மோடியின் பேச்சை மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கவும் நினைக்கிறேன். பள்ளிகளில் இந்தி இருப்பது நல்லது. இங்கு இருக்கும் குழந்தைகளை போன்று மூத்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் நல்லது. இந்தியை அனைவரும் கற்றுக்கொண்டால் மோடி பேசுவது புரிந்து நாமும் மாறிவிடுவோமோ என்ற பதட்டமும், பயமும் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+