பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ்
சென்னை: தமிழகத்தில் சொத்து வைத்திருப்பவர்கள், புதிதாக நிலம் வாங்கத் திட்டமிடுபவர்கள் என அனைவரையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள ஒரு அதிரடி உத்தரவைத் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தற்போது பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் எந்தவொரு இடமும் விடுபடாத அளவுக்கு, விடுபட்ட அனைத்து சர்வே எண்களுக்கும் இந்தமாத இறுதிக்குள் புதிய வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயம் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பதிவுத்துறை பணிகள் குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மேற்கண்ட அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலுவையில் உள்ள பல முக்கியப் பத்திரப் பதிவுகள் மற்றும் நில உரிமையாளர்களின் நீண்ட நாள் சிக்கல்களுக்கு இந்த மாத இறுதிக்குள் ஒரு முக்கியத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழிகாட்டி மதிப்பு - பத்திரப்பதிவு
அரசாங்கம் நிர்ணயம் செய்யும் இந்த வழிகாட்டி மதிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலத்தை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ, பத்திரப்பதிவு செய்வதற்காக அரசு நிர்ணயம் செய்திருக்கும் ஒரு குறைந்தபட்ச விலையாகும்.
பொதுவாக சந்தை மதிப்பு என்பது வாங்குபவரும் விற்பவரும் பேசி முடிக்கும் விலையாக இருக்கும், ஆனால் அரசுக்குச் செலுத்த வேண்டிய முத்திரைத் தாள் கட்டணங்கள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் ஆகியவற்றை இந்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே அதிகாரிகள் கணக்கிடுவார்கள்.
சொத்து பரிமாற்றங்களில் குளறுபடி
இது அரசின் வருவாய் இழப்பைத் தடுப்பதற்கும், சொத்து பரிமாற்றங்களில் நடக்கும் குளறுபடிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், ரியல் எஸ்டேட் சந்தையில் நிலத்தின் விலையைச் செயற்கையாக உயர்த்துவதைத் தடுத்து பொதுமக்களுக்கு ஒரு நியாயமான விலையைக் காட்டுவதற்கும் மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வழிகாட்டி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மற்றும் வங்கிக் கடன் பெறும் நுகர்வோரின் பொருளாதாரத் திட்டமிடல் ஆகியவற்றிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இதனால் தான், நிலத்தின் உண்மையான மதிப்பை அரசு துல்லியமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை மிக இன்றியமையாத கடமையாகக் கருதுகிறது.
சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்புகள்
அதனால்தான் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், எதுவும் விடுபடாமல் உரிய அனைத்து சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்புகளை உடனே இணைக்க வேண்டும் என்றும், இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முழுமையாக முடித்துவிட வேண்டும் என்றும் கறாராகக் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், பத்திரப்பதிவுக்காக வரும் பொது மக்களிடம், சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருப்பவர்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களை அமர வைத்து அவர்களின் தேவைகளைச் செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
பழைய பத்திரங்கள்
அதேபோல பதிவு முடிந்த பத்திரங்களை, எந்தவொரு தாமதமும் இல்லாமல் அதே நாளில் மக்களிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்றும், கட்டிட களப்பணி தொடர்பான பத்திரங்களை நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள பழைய பத்திரங்களை மாவட்ட பதிவாளர்கள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த முக்கியக் கூட்டத்தில் பதிவுத்துறை செயலர் குமரகுருபரன், பதிவுத்துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர், இதனால் இனிவரும் நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications