சொத்துவரி கட்டிட்டீங்களா.. இன்னும் கட்டலையா? உங்க சொத்தை "ஏலம்" விடப்போறாங்களாமே.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயப்போகிறதாம்.. இதுகுறித்து, தமிழக அரசு முக்கிய முடிவு ஒன்றையும் எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி நடவடிக்கை எடுக்கப்போவது இது முதல்முறையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்துவரியாகும்... கிட்டத்தட்ட 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.. எனவே, வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடைசி நாள்: கடந்த வருடம், சொத்துவரி உயர்த்தப்பட்ட பிறகு, நடப்பு ஆண்டின் சொத்துவரி இலக்கானது ரூ.1,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது... முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வருகிற 30-ந்தேதியே கடைசி நாளாகும். இப்போதைக்கு ரூ.605 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள ரூ.200 கோடியை வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதனால், வருகிற 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சொத்து உரிமையாளர்களுக்கு, எஸ்எம்எஸ் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. ஒருவேளை 30-ந் தேதிக்கு பிறகு செலுத்தினால், 1 சதவீதம் அபராதம் கட்ட வேண்டுமாம்.. அதனால், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனே செலுத்தி, அபராதத்தை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வரி இழப்பு: இதுஒருபுறம் என்றால், நீண்ட காலமாகவே சொத்துவரி கட்டாமல் இருப்பவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை மாநகராட்சிக்கு கையில் எடுத்துள்ளது.. காரணம், இப்படி வரியை செலுத்ததால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. அதனால், வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயப்போகிறதாம்..
கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் இதற்கான சட்ட விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போருத சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மீதான இறுக்கம் கூடிவருகிறது. இப்படி நீண்டகாலமாகவே சொத்துவரி செலுத்தாமல், 100 பேர் இருக்கிறார்களாம்.. அவர்கள் எல்லாம் ரூ.120 கோடி சொத்து வரி செலுத்த வேண்டுமாம்.. பலமுறை அவகாசம் தந்தும், இதுவரை சொத்துவரியை செலுத்தவில்லையாம்.
சொத்து வரி: எனவே, இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. அதன்படி, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விட்டு அதன் மூலம் சொத்துவரியை பெறவும் நடவடிக்கை எடுக்க போகிறார்களாம். அதனால், 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாவிட்டால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications