கிளாம்பாக்கத்தை கையில் எடுத்த அண்ணாமலை.. பேருந்துகளை விட பிரச்சனைகள் அதிகமாம்! 8000 பஸ்கள் எங்கே?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளை விட அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை அதிகம் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
பூந்தமல்லியில் யாத்திரையின்போது பேசிய அவர், "தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக அரசால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் எதுவுமே முன்னேறவில்லை. இன்றுவரை, மழைக்காலத்தில் வெள்ளக்காடாகத்தான் மாநிலத்தின் தலை நகரமே தத்தளிக்கிறது. கடந்த 2023 டிசம்பரில், மிக்ஜாம் பெருவெள்ளத்தால் திருமழிசை சிப்காட் மூழ்கியது. ஆனால் இவற்றை எல்லாம் சரி செய்யாமல், இந்த ஜனவரி மாதம், முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் 100 விழா நடத்தி, பூந்தமல்லியில் 500 கோடி மதிப்பில் சினிமா நகரம் உருவாக்குவோம் என்று கூறுகிறார்.

மக்களுக்கு வடிகால், நல்ல சாலை என இவையெல்லாம் செய்யாமல், சினிமாவுக்கு 500 கோடி செலவு செய்கிறார். மக்கள் தேவைக்கு நேரெதிராக ஆட்சி நடக்கிறது என்பதற்கு இதுவே சான்று. குறிப்பாக, உதயநிதி தயாரிக்கும் திரைப்படங்களின் செலவைக் குறைக்க, மக்கள் வரிப்பணத்தில் சினிமா நகரம் அமைக்கிறது திமுக. சென்னை மாறவேண்டும். மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும். இந்தியா டுடே பத்திரிகையின் சர்வே, கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில், ஸ்டாலினை 61% மக்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்கள்.
ஆனால், நேற்று வெளிவந்த சர்வே முடிவுகளில், 36% மக்கள் தான் முதலமைச்சர் ஸ்டாலினை மதிக்கிறார்கள். நம் கண் முன்னால், பெங்களூர், மும்பை, டெல்லி என நாட்டின் நகரங்கள் அனைத்தும் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றன. அங்கிருக்கும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் நகரங்களை முன்னேற்ற உழைக்கின்றனர். ஆனால் சென்னை பின்நோக்கிச் செல்கிறது. சென்னையில் வளர்ச்சி இல்லை. நாட்டின் தூய்மை நகரங்களின் வரிசையில், சென்னை, நாட்டில் 199 ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் 88% குப்பை மறுசுழற்சி செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது.
மழை வந்தால் இதனால் சென்னை முழுவதுமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. காரணம், சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர்கள். எந்தத் தகுதியுமே இல்லாமல், வாரிசு கோட்டாவில் பதவிக்கு வந்தவர்கள். முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், தங்கம் தென்னரசுவின் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி. இவர்களுக்கு மக்களின் கஷ்டம் எப்படி தெரியும். சென்னை மழையால் தத்தளித்தபோது, இவர்களில் ஒருவர் கூட களத்தில் இல்லை.
இன்று தமிழகத்தில் 8,000 பேருந்துகளை, ஓட்டுநர்கள் இல்லாமல் நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் அவதிக்குள்ளாவது சாதாரண பொதுமக்களே. சாதாரணமாக ஒரு திட்டத்தைச் சென்னையில் செயல்படுத்த பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சி மாறும்போதெல்லாம் கமிஷனுக்காக, மீண்டும் முதலில் இருந்து பணிகளைத் தொடங்குகிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் பல மடங்கு முன்னேறி வருகின்றன. ஆனால், சென்னை, குடும்ப அரசியலை நம்பி ஏமாந்து, தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
திருமழிசையில் பேருந்து நிலையம் கட்டப் போவதாக 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். தனது துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர் சேகர்பாபு 80% பேருந்து நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் திறக்கப் போவதாகவும் அறிவித்தார். இன்னும் அந்தப் பணிகள், 50% கூட முடியவில்லை. ஆமையை விட மெதுவாக பணிகளை நடத்துகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கும் பேருந்துகளை விட தினம் ஒரு பிரச்சினை என்று ஆர்ப்பாட்டம் நடப்பதே அதிகமாக இருக்கிறது." என்று தெரிவித்து உள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications