தமிழக அரசின் வரி வருவாய் 52.3% அதிகரிப்பு- நிதி அமைச்சர் பிடிஆர் ஹேப்பி ட்வீட்!
சென்னை: தமிழக அரசின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளதாக கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடக செய்திகளை சுட்டிக் காட்டி தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் வரி வருவாய் தொடர்பாக கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் ஊடகங்கள் இன்று செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில் நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் தமிழகத்தின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வருவாய்:
மாநில சரக்கு சேவைகள் வரி வருவாய் ரூ13,692.84 கோடி
பதிவுத்துறை வருவாய் ரூ4,457.95 கோடி
நில வருவாய் ரூ58.46 கோடி
விற்பனை வரிகள், வர்த்தகம் உள்ளிட்டவை .. ரூ13119.24 கோடி
எக்ஸைஸ் வரிகள் ரூ2594.55 கோடி
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு வருவாய் நிலவரம்:
மாநில சரக்கு சேவைகள் வரி வருவாய் ரூ9224.11 கோடி
பதிவுத்துறை வருவாய் ரூ2,314.46 கோடி
நில வருவாய் ரூ38.07 கோடி
விற்பனை வரிகள், வர்த்தகம் உள்ளிட்டவை .. ரூ9484.81 கோடி
எக்ஸைஸ் வரிகள் ரூ1199.23 கோடி
முந்தைய நிதி ஆண்டின் காலாண்டுடன் ஒப்பீடு:
மாநில சரக்கு சேவைகள் வரி வருவாய் 48.4% அதிகரிப்பு
பதிவுத்துறை வருவாய் 92.6% அதிகரிப்பு
நில வருவாய் ரூ53.5%
விற்பனை வரிகள், வர்த்தகம் உள்ளிட்டவை மூலமாக.. 38.3%
நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வரி வருவாய்: ரூ33923.04 கோடி
முந்தைய நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வரி வருவாய்: ரூ22260.68 கோடி
நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு வரி வருவாய் மொத்தமாக 52.3% அதிகரித்துள்ளது.
இந்த ஊடக செய்திகளை தமது ட்விட்டர் பக்கத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்துள்ளார். மேலும் பாஜக என குறிப்பிடாமல் அக்கட்சியை சேர்ந்த ஒருவரது பெயரை குறிப்பிட்டு இத்தகைய அரசின் புள்ளி விவரங்களை கண்டுகொள்ளமாட்டார்கள் எனவும் குட்டு வைத்துள்ளார் நிதி அமைச்சர் பிடிஆர்.
முன்னதாக சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications