உதயமானது புதிய உதயம்.. இளைஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் சேர்ந்து உருவாக்கிய கட்சி!
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.ஆர்.டி.சிவ சுப்ரமணியம் என்பவரால் புதிய உதயம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.ஆர்.டி.சிவ சுப்ரமணியம் என்பவரால் புதிய உதயம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை இந்த கட்சி தொடங்கப்பட்டது. இதன் கொடி, கொள்கைகள் மற்றும் பெயர் அதே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்சி பெருவாரியான மருத்துவர்கள் , பொறியாளர்கள் , மென்பொருள் ஊழியர்கள் , வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து தொடங்கப்பட்ட கட்சியாகும். புதியதொரு மாற்றத்தை எதிர்நோக்கி உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கம் இது என்று கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கட்சியின் தொடக்க விழாவில் பேசிய நிர்வாகிகள், தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் , தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும் விவசாயத்தை ஒரு லாபகரமான தொழிலாகவும் மாற்றுவதே எங்கள் முதன்மை நோக்கம்.

தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் புது காவியங்கள் ,காப்பியங்கள் உருவாகவும் பழம்பெரும் நூல்களை அவற்றின் பெருமையை உலகறியச் செய்யவும் அயராது பாடுபடுவோம், என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications