வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்தது என்றால்... எதற்காக கூட்டணி வைத்தார் ராமதாஸ்? -R.s.பாரதி கேள்வி
சென்னை: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் திமுக துரோகம் செய்தது என்றால் எதற்காக தங்களுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துக் கொண்டார் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வினவியுள்ளார்.
வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த பலரும் திமுகவில் தங்களை இணைத்து வருவதால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அவதூறு பரப்புவதாக ராமதாஸை சாடியுள்ளார் பாரதி.
மேலும், 10 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேசாமல் இப்போது தேர்தல் வருவதால் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்னெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

வன்னியர் சமுதாயம்
வன்னியர் சமுதாயத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்காக பாமக சார்பில் ஏற்கனவே பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும், சி.ஆர்.ராஜன் என்பவர் தனது அமைப்பு சார்பில் இம்மாதம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமக இந்தக் கோரிக்கையில் உறுதியாக நிற்கிறது. இதனால் இன்னும் அதிமுகவுடன் கூட்டணி விவகாரம் கூட இறுதியாகவில்லை. இந்த சூழலில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிப்பதில் திமுக துரோகம் செய்ததாக ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள திமுக எம்.பி.ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் துரோகம் செய்தோம் என்றால் ராமதாஸ் எதற்கு கடந்த 2011 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார் என வினவியுள்ளார்.

ராமதாஸ் அவதூறு
மேலும், இத்தனை மாதங்களாக விட்டுவிட்டு தேர்தல் வருவதால் இப்போது இட ஒதுக்கீடு முழக்கத்தை ராமதாஸ் முன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வன்னியர் சமுதாய பெருமக்களின் வாக்குகளும், ஆதரவும் திமுகவை நோக்கி வருவதால் அந்த அச்சத்தில் அவதூறு பரப்பி வருவதாக ராமதாஸை விமர்சித்தார்.

கட்சியினர் எதிர்பார்ப்பு
இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக என்ன நிலைப்பாடு எடுக்கவிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த அரசியல் களமும் கவனித்து வருகிறது. இதேபோல் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் பாமகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications