ராதாபுரத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கூடாது.. ஹைகோர்ட்டில் எம்எல்ஏ இன்பதுரை அவசர வழக்கு
Recommended Video
சென்னை: ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக எம்எல்ஏ இன்பதுரை அவசர வழக்கு ஒன்றை, தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை நடக்க கூடாது என மனுவில் கோரியுள்ளார்.
2016ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் அப்பாவுவை வெற்றி பெற்றார்.

இதில் 203 தபால் ஓட்டுகள் செல்லாது என்று தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததாகவும், ஆனால் அது செல்லத்தக்கது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அப்பாவு.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தபால் வாக்குகளையும், இறுதி சுற்று வாக்குகளையும் மறுபடியும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கான கால நேரத்தை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்தை, நீதிபதி கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் பதிலளித்த, தேர்தல் ஆணையம், வரும் நாலாம் தேதிக்குள், தபால் வாக்குகளையும், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறுபடியும் எண்ணுவது என்பது சிரமமான காரியம். அதற்கு கூடுதல் கால அவகாசம் மற்றும் ஆள் பலம் தேவை என்று தெரிவித்தது.
இதனிடையே இன்பதுரை தரப்பில், அவசரமாக ஒரு முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதுவரை வாக்குகளை என்ன கூடாது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க அப்பாவுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு, வழக்கை ஒத்திவைத்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications