Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டமே இல்லை.. இங்கே என்ன பண்றது? சிரிப்பை மறந்த "சித்தி".. பாதியில் சென்னைக்கே புறப்பட்ட ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட்டார்.

2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவில் இணைத்தார் சரத் குமார். அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

Radhika Sarathkumar stops the campaigning in Virudhunagar and leaves midway to Chennai

இதையடுத்து பாஜகவின் விருதுநகர் வேட்பாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த இவர் அங்கே பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு, பரப்புரையை ரத்து செய்து சென்னை புறப்பட்டுச் சென்றார். சிரித்த முகத்தோடு வந்தவர்.. கூட்டம் இல்லாததால் சிரிப்பை மறந்து டென்சன் ஆனார்.

கூட்டம் வரும் என்று காத்திருந்தவர் கடைசியில் அங்கிருந்து சென்றார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டம் சேரவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்

அங்கே ராதிகாவை வேட்பாளராக நியமித்ததை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. நேற்று விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் விருதுநகரில் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று கூட்டத்தில் ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர்வாகிகள் யாரும் வராமல் ஏமாற்றம் அளித்துள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

பிரமாண பத்திரம்: இந்த நிலையில்தான் ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன்படி ராதிகா சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:

அசையும் சொத்து மதிப்புகள்: 27 கோடி ரூபாய்

அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 26 கோடி ரூபாய்

அதன்படி சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:

அசையும் சொத்து மதிப்புகள்: 8 கோடி ரூபாய்

அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 21 கோடி ரூபாய்

ராதிகா சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 6 கோடி ரூபாய்

சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 8 கோடி ரூபாய்

இரண்டு பேரும் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை மூலம் அரசுக்கு செலுத்தாமல் வைத்துள்ளனர்.

ராதிகா சரத்குமாருக்கு உள்ள கடன் 14 கோடி ரூபாய்

சரத் குமாருக்கு உள்ள கடன் 19 கோடி ரூபாய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+