Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயநாட்டில் ராகுல்! கன்னியாகுமரியைப் புறக்கணித்தது ஏன்? தமிழ்நாடு வெறும் பகல் கனவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? அந்தக் கள சூழல் எப்படி உள்ளது. அவருக்குச் சாதகமான அம்சங்கள் என்ன?

காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 39 வேட்பாளர்களின் பெயர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rahul in Wayanad Why not contest in Kanyakumari

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் வெளியாகும்வரை அவர், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி அல்லது திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

Rahul in Wayanad Why not contest in Kanyakumari

திருச்சி அவருக்குச் சாதகமான தொகுதியாக இருக்கும் என்றும் 5 லட்சம் வாக்குகள் மேல் பெற்று ராகுல் வெற்றிபெறுவது உறுதி என்று திருச்சி வேலுச்சாமி நம்பிக்'கை' தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் டாடா காட்டி விட்டு மீண்டும் வயநாட்டில் போட்டியிட இருக்கிறார்.

Rahul in Wayanad Why not contest in Kanyakumari

உபியில் உள்ள ரேபரேலி தொகுதியில் 2002 முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். ஏறக்குறைய சோனியா 18 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ரேபரேலியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

1999இல் அமேதியில் போட்டியிட்ட அவர், அதன்பின்னர் வேறு தொகுதிக்குப் போகாமல் ரேபரேலியில் மட்டுமே போட்டியிட்டு வெற்றியும் பெற்று வந்தார்.

Rahul in Wayanad Why not contest in Kanyakumari

ஆக, காலங்காலமாகக் காங்கிரஸ் கோட்டையாக ரேபரேலி இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடப் போவதில்லை. அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

எனவே தனது குடும்ப செல்வாக்கைக் கட்டிக்காப்பதற்காக ராகுல் தனது தாய் சோனியா தொகுதியான ரேபரேலியில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு அவர் வயநாடு பக்கமே திரும்பி இருக்கிறார்.

Rahul in Wayanad Why not contest in Kanyakumari

ஒவ்வொரு தேர்தலிலும் சோனியா சுமார் 5 லட்சம் வாக்குகளை வாங்கிய ரேபரேலியை விட்டுவிட்டு அவர் மீண்டும் வயநாடு பக்கம் வந்ததற்கு சில காரணங்கள் உள்ளன.

குறிப்பாக, உபியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதனால், உபி மக்கள் பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் அதிக நம்பிக்கையை அளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதைக் காட்டிலும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராகுலின் பதவியைத்தான் பாஜக மறைமுகமாகப் பறித்தது. அதை அவர் மீண்டும் சட்டரீதியாகப் போராடி மீட்டார். ஆகவே, உபியைவிட, மீட்ட தொகுதியில் நிற்பதே நல்லது என்ற முடிவுக்கு ராகுல் வந்துள்ளார்.

Rahul in Wayanad Why not contest in Kanyakumari

ஒருவேளை அவர் ரேபரேலியில் நின்றால், காங்கிரஸின் மற்றொரு கோட்டையான அமேதி தொகுதியை ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்துவிட்டு நின்றதைப் போல் ஆகக் கூடும் என ராகுல் அஞ்சுவதாகச் சொல்கிறார்கள்.

வயநாட்டில் ராகும் மொத்த வாக்குகளில் 64.94% கடந்த முறை பெற்றிருந்தார். ரேபரேலியில் கடந்த தேர்தலில் சோனியா 55.80% வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். ஆக, ரேபரேலியைவிட வயநாடு கொஞ்சம் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக ராகுல் உணர்ந்துள்ளார்.

அத்துடன் கடந்த 2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதிக்குள் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் வயநாட்டுக்குள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்துள்ளது. எனவே வயநாடு தொகுதிக்கு 'ஆட்சிக்கு எதிரான நாடு' என்ற பெயரை ஆளும் கட்சியினர் சூட்டியுள்ளனர்.

Rahul in Wayanad Why not contest in Kanyakumari

தரவுகளின் படி ஆராய்ந்தால் மொத்த வாக்குகளில் 25.6% சிபிஐ(எம்) கட்சிக்கு விழுந்துள்ளது. காங்கிரசுக்கு 34.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மறைந்த காங்கிரஸ் தலைவர் எம்.ஐ.ஷாநவாஸ் கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.

அதாவது வயநாடு மக்களவைக்குள் இடம்பெற்றுள்ள மானந்த வாடி, திருவம்பாடி ஆகிய 2 தொகுதிகளில் சிபிஐஎம் வென்றுள்ளது. சுல்தான் பத்தேரி, கல்பெட்டா, வண்டூர் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.

இந்தச் சாதகமான சூழல்தான் ராகுல்காந்தியை வயநாடு பக்கம் தங்கவைத்துள்ளது. வயநாடும் ராகுலைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஆசைதான் வெறும் பகல் கனவாகவே போய்விட்டது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+