தமிழக கடலோரங்களில் பரவலாக மழை.. புதுச்சேரி, நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை
Recommended Video

சென்னை: கன மழை எதிரொலியாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வட தமிழக கடலோரத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

திரூவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் உள்ளிட்ட 5 வட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதேசமயம், காலையிலிருந்தே சென்னையில் மேகமூட்டமாக உள்ளது. மழை இல்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி சுற்று வட்டாரத்தில் மட்டும் லேசான மழை உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலையிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் காலையிலிருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் காரைக்குடி சுற்று வட்டாரத்தில் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் நல்ல மழை பெய்துள்ளது.
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல மதுராந்தகம் ஏரியில் ஒரே நாளில் 13 அடி அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஏரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை.. தேர்தலால் மாணவர்கள் குஷி! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா!












Click it and Unblock the Notifications