கடலூர் முதல் கரூர் மாவட்டம் வரை வெளுக்கிறது மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகை மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதேபோன்று திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வடுவூர் போன்ற பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை லாலாபேட்டை, குளித்தலை மாயனூரில் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications