நடிகர் ரஜினி எப்போது அரசியல்வாதி ரஜினி ஆவார்? பரபர கேள்விக்கு ரஜினியின் பதில் என்ன தெரியுமா?
எப்போது தீவிர அரசியலில் ஈடுபட போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதில் அளித்து இருக்கிறார்.
சென்னை: சினிமாவில் தீவிரமாக நடிப்பதை போலவே, எப்போது தீவிர அரசியலில் ஈடுபட போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதில் அளித்து இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட பேட்ட படம் நேற்று அதிகாலை வெளியானது. நேற்று காலை முதல் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் இருந்து திருப்பிய பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த மாதம் இறுதியில் நடிகர் ரஜினிகாந்த அமெரிக்கா சென்று இருந்தார். இரண்டு வாரம் அங்கே இருந்தவர் நேற்றுதான் சென்னை வந்தார்.
நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்.
அனைத்து பெருமையும் கார்த்திக் சுப்புராஜையே சேரும். ரசிகர்களின் சந்தோஷமே தனது சந்தோஷம். அவர்கள் படத்தை பார்த்து மகிழ்வது பிடித்துள்ளது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள், என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர், நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் எப்போது அரசியவாதியாவார், எப்போது தலைவராவார் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை கேட்டவுடன் கொஞ்சம் ''ஜெர்க்'' ஆன ரஜினி, ''அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம், நன்றி'' என்று குறிப்பிட்டார். இதனால் ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications