விதி மீறல்.. ரஜினி மக்கள் மன்ற நெல்லை துணை செயலாளர்.. தளபதி முருகன் அதிரடி நீக்கம்!
ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட துணை செயலாளர் தளபதி முருகன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட துணை செயலாளர் தளபதி முருகன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி 2017 அன்று வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் இந்த பணிகளை கவனித்து வருகிறார்.
மிஷன் சக்தி.. மோடியின் அறிவிப்பை ஆராய வேண்டும்.. தனி குழு அமைத்தது தேர்தல் ஆணையம்!
இந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் நெல்லை மாவட்ட துணை செயலாளர் தளபதி முருகன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மன்ற கட்டுப்பாட்டை மீறியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
அவருடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்பில் இருக்க கூடாது என்று ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.