“நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?” ரஜினிகாந்த் கொடுத்த உடனடி ரியாக்ஷன்!
கோவை: நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் அரசியல் களம் கண்டு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில் அதுபற்றிய கேள்வியைத் தவிர்த்துள்ளார் ரஜினிகாந்த்.
'ஜெயலர் - 2' படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா செல்வதற்காக இன்று சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், "நான் ஜெய்லர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும்" என்று தெரிவித்தார்.

அப்போது நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நோ கமெண்ட்ஸ்" என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார். நடிகர் விஜய் அரசியல் களம் கண்டுள்ள நிலையில் 2026 சட்டசபை தேர்தலை முதன்முறையாகச் சந்திக்கிறார். 2 மாநாடுகளை நடத்தி உள்ள உள்ள விஜய், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
விஜய்யின் பிரச்சார பயணங்களில் அதிகமான தொண்டர்கள், ரசிகர்கள் கூடி வருகின்றனர். விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி, மக்களைச் சந்தித்து வரும் சூழலில் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அதுபற்றிய கேள்வியைத் தவிர்த்துள்ளார் ரஜினிகாந்த்.
மேலும், யாத்ரி சேவா திவாஸ் நாளையொட்டி கோவை விமான நிலையத்தில் அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் படுகர் நடனமாடி பயணிகளை வரவேற்றனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. வேண்டுகோளை ஏற்று மோடி கட் அவுட் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "ராஜ்கமல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து ஒரு படம் பண்ண போகிறோம். அந்த படத்திற்கான இயக்குநர் இன்னும் முடிவாகவிலலை. கமலும் நானும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் இருவரும் இணைந்து நடிப்போம். ஆனால் அதற்கான கதை, கதாபாத்திரம், இயக்குநர் என யாரும் இன்னும் முடிவாகவில்லை," என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications