மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? சட்டென வந்த அரசியல் கேள்வி.. பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்!
சென்னை: ஒரு வார கால பயணமாக இமயமலை செல்லும் ரஜினிகாந்த் இன்று காரில் இருந்தபடி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த், த.செ. ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக துபாய்க்கு சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று இமயமலைக்கு புறப்பட்டுள்ளார் ரஜினி.
ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு திரும்பினார்.
இந்நிலையில் அபுதாபில் இருந்து சென்னைக்கு நேற்று திரும்பிய ரஜினிகாந்த், இன்று தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டுள்ளார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார் ரஜினிகாந்த். ஜூன் 3 அல்லது 4 ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
சென்னை திரும்பிய பின்னர், 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து ஆன்மீக பயணமாக இமயமலை புறப்படும் முன்பாக விமான நிலையத்திற்கு காரில் சென்ற ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இமயமலை பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், "ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். இப்போது அங்கு சென்று கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை சென்று திரும்ப இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அப்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாரா ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், "சாரி, அரசியல் கேள்விகள் வேண்டாம்" என பதில் அளித்தார்.
இசையா? கவிதையா என்ற போட்டி தமிழ் சினிமா உலகில் நிலவி வருவது பற்றி உங்கள் கருத்து என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தவாறு கையெடுத்துக் கும்பிட்ட ரஜினிகாந்த், "அண்ணா.. நோ கமெண்ட்ஸ்" எனக் கூறிவிட்டு கிளம்பினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications