அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. எனது கருத்தை மக்களுக்கு பரப்பியதற்கு மனமார்ந்த நன்றி- ரஜினி
சென்னை: அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்ற கருத்தை பாமர மக்களுக்கு கொண்டு போய் சேர்த்த ரசிகர்களுக்கு நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு முன்னதாக இரு முறை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அவர் அரசியல் கட்சியின் பெயரை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. அதாவது சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளதாக ரஜினி தெரிவித்தார். அந்த அரசியல் மாற்றம் குறித்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறு ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் மாற்றம் இருந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் என்றும் அது இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்த கருத்தை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அது போல் ரஜினியின் பேச்சு ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளிவந்தது. ரஜினியின் கருத்தை ஒரு சிலர் வரவேற்றுள்ளனர். ஒரு சிலர் இதெல்லாம் ஆகும் காரியமா என கேட்டுள்ளனர்.
தற்போது எங்கு திரும்பினாலும் ரஜினியின் 3 திட்டங்கள் குறித்த பேச்சே இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications