"பிரபாகரன்"- "கருணாநிதி".. முரசொலி மாறனை அழைத்து ராஜீவ் காந்தி சொன்ன "அந்த சேதி".. புதைந்த வரலாறு!
சென்னை: திராவிடர் இயக்கத்தின் அறிவு களஞ்சியம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனசாட்சி முரசொலி மாறனின் 90-வது பிறந்த நாள் இன்று. இந்திய அரசியலில் எத்தனையோ திருப்புமுனைகளின் பின்னணியில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளில் பலவற்றில் "நிழல் சாட்சி"யமாக திகழ்ந்தவர் முரசொலி மாறன்.
முரசொலி மாறனின் வரலாற்றில் எழுதப்படாத ஒரு நிகழ்வு, ராஜீவ் காந்தி- தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புடையது. இது தொடர்பாக முரசொலி மாறன் அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இப்படி பதிவு செய்திருக்கிறார். அப்போது ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் முரசொலி மாறன்.

"இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் போதே அதனை கடுமையாக பிரேமதாச (இலங்கை முன்னாள் ஜனாதிபதி) எதிர்த்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் - பிரேமதாச இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனடிப்படையில் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார் பிரேமதாச. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி என்னை வரவழைத்தார். "பிரபாகரனுக்கு நாம் உதவிகள் செய்யலாம்.. புலிகள் குறித்து உண்மை எனக்கு தெரியாமல் போய்விட்டது. முதல்வர் கருணாநிதியை விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லுங்கள். தமிழ் மாநிலம் ஒன்றை அமைக்க பிரபாகரனுக்கு நாம் உதவலாம்" என்றார். அப்போது "ஏற்கனவே பிரபாகரன் தனி மாநிலத்தைத்தான் நடத்தி வருகிறார். வரி வசூல், நீதிமன்றம் என எல்லாமே அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றேன். ராஜீவ் காந்தி சிரித்தபடியே, தமிழ் ஈழத்தின் காட்பாதர்/ பிதாமகனே திமுகதான் என கூறினார்.- இதனை திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் தாம் எழுதிய ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய உளவுத்துறை சதிகள் என்கிற நூலில் விவரித்திருக்கிறார்.
இதுபோல 1990-ல் திமுக ஆட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் யோகி, ஆண்டன் பாலசிங்கம் உள்ளிட்டோர் மற்றும் இதர போராளி குழுக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை அல்லது சமாதானப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. அப்போதும் முரசொலி மாறனே நேரடியாக இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்கின்றன வரலாற்றுப் பக்கங்கள்!
கருணாநிதியின் மனசாட்சி அல்லவா!
-
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!












Click it and Unblock the Notifications