எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு.. நாமக்கல் மாணவர் முதலிடம்!
சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த பட்டியலை வெளியிட்டார். கடந்த ஆண்டை விட 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தரவரிசை பட்டியலில் நாமக்கல்லை சேர்ந்த மாணவர் ரஜினீஷ் முதலிடம் பிடித்துள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியின் நடப்பு ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று முன்பு கூறியிருந்தார். அதன்படி இன்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மா சுப்பிரமணியன் பேசியதாவது:-

கடந்த ஆண்டை விட தற்போது 150 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரியில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்தமான எம்பிபிஎஸ் க்கான இடங்கள் 9200. பிடிஎஸ் என்ற பல் மருத்துவத்திற்கான இடங்கள் 2150. இந்த வகையில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ள முதல் 10 மாணவர்களின் பெயரை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். நாமக்கலை சேர்ந்த மாணவன் ரஜினிஷ் என்ற மாணவன் 720 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். இவ்வாறு மா சுப்பிரமணியன் கூறினார்.
முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிதும், 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு பட்டியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் 22, 23 ஆம் தேதிகளில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதன் பின்னர் பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது.
கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு பின்னர் 3 நாட்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 36,100 பேர் மட்டும் விண்னப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications