குடும்ப அட்டைதாரர்களுக்கு குஷி.. இனிமேல் ரேஷனில் நிம்மதி..பார்டரில் குவிந்த பார்வை.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் நன்மை கருதி, தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது.. இதனால், அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் ஓரளவு குறைந்து வருகிறது. ஆனால், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை..

அண்டை மாநிலம்: குறிப்பாக கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி அவ்வப்போது கடத்தப்பட்டிருக்கிறது.. தமிழக எல்லைகளில் இதற்காகவே சில புரோக்கர்கள் இருக்கிறார்களாம். இவர்கள்தான், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு அரிசியை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
இதனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்று ரேஷன்தாரர்கள் புகார்கள் சொல்ல துவங்கினர். இந்த கடத்தலை ஒழிக்க தமிழக அரசும் எத்தனையோ விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தற்சமயம் ஓரளவு கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், வெறும் 5 மாதங்களில், 3,660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரேஷன் பொருளை கடத்தி 3,794 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளியான லிஸ்ட்: இதுகுறித்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் ஜோஷு நிர்ம ல்குமார் ஒரு புள்ளிவிவரத்தையே வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:
"கடந்த ஐந்து மாதங்களில் 10,193 குவிண்டால் ரேஷன் அரிசி, 2,310 லிட்டர் மண்ணெண்ணெய், 1,003 கியாஸ் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இக்குற்றங்களில் ஈடுபட்ட 3,794 பேர் கைது செய்யப்பட்டனர். 568 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 991 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இது மட்டும் இல்லாமல் கள்ளச் சந்தை தடுப்பு, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல்கள்: அருகில் உள்ள மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கு அரிசி கடத்தலைத் தடுக்க அம்மாநில வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., விஜய கார்த்திக் ராஜ் தலைமையில் 16 ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
பக்கத்து மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கு போலீஸாருடன் இணைந்து வாகன தணிக்கை தொடர்ந்து செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம்" என்று ஜோஷி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
பெருகும் நம்பிக்கை: தமிழக அரசின் இதுபோன்ற அதிரடிகளால், ரேஷன் பொருட்களின் கடத்தல்கள் குறையும் என்றும், குடும்ப அட்டைதாரர்களின் அதிருப்தியும் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications