Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. ரேஷன் வாங்க போறீங்களா? இதை நோட் பண்ணுங்க.. அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகைக்கான அனைத்து பணிகளும் உச்சக்கட்ட பரபரப்பில் நடந்துவரும் நிலையில், அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது..

தமிழக அரசு அறிவித்து உள்ள மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.. இதற்கான பயனாளிகள் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர்.

Ration Shops are closed for 2 days and Tamil nadu government Major Announcement

தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாக முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்த நிலையில், விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 18-ந்தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்றன.

உரிமைத்தொகை: மேலும், சென்னையில் 3 நாட்கள் விடுபட்டவர்களுக்கு நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 50,427 பேர் பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணி நேற்று முன்தினம் அதாவது 23 ந்தேதி முதல் துவங்கி உள்ளன.. விண்ணப்பித்த படிவங்களில் முறையான தகவல் இல்லாத சந்தேகம் உள்ள படிவங்களை மட்டும் ஆய்வு செய்கிறார்கள்.

இந்த பணிகள் இந்த அளவுக்கு துரிதமாக நடந்துள்ளதற்கு காரணம், ரேஷன் கடைகளே.. கடந்த மாதம், ரேஷன் கடைகளுக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் முக்கிய அறிவுறுத்தல்கள் சென்றிருந்தன. அதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த திட்டம் எந்த சிறு தடங்கலும் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

விடுமுறை நாட்கள்: அதேபோல, தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு கடந்த ஜூலை 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்தது.. மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறையை ரத்து செய்து இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதனால், அன்றைய தினம் மாநிலம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கின. மேலும், இந்த விடுமுறை இழப்பை ஈடு செய்யும் விதமாக இந்த மாதம் 26ம் தேதி, ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் அரசு அந்த அறிவிப்பில் கூறியிருந்தது.

அதன்படியே, நாளைய தினம் சனிக்கிழமை, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், தொடர்ந்து 2 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+