Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடைகள் இன்று இயங்கும்.. கலைஞர் உரிமைத் தொகை டோக்கன் பெற்றவர்கள் செல்லலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வீடு வீடாக சென்று குடும்பத் தலைவிகளுக்கு டோக்கன் மற்றும் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கி வருகிறது.

Ration shops will be working today, says Tamilnadu Government

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் அருகே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களில் உரிய ஆவணங்களுடன் அவர்கள் எந்த தேதியில் எந்த நேரத்திற்கு ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்ற தகவல் இருக்கும்.

அதன்படி அவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து கொடுத்தால் ரேஷன் கடை ஊழியர்களே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருவர். இந்த திட்டத்திற்கான டோக்கன் வழங்கும் பணிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக இன்றும் ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இன்று இயங்கும். இன்றைய தினம் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் சம்பந்தப்பட்ட முகாம்களுக்கு செல்லலாம். இந்த வேலைநாளை ஈடுகட்டும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+