குமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை
சென்னை: கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்பி ரவிக்குமார் எழுதிய கடிதத்தில் கூறுகையில் கன்னியாகுமரியில் தமிழகத்தின் பெருமைமிகு சின்னங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் அய்யன் திருவள்ளுவரின் சிலை சரியான பராமரிப்பு இன்றி சீரழிந்து கொண்டுள்ளது.

திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சிலைக்கு மின்வெளிச்சம் கூட இல்லாத நிலை உள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று கூட சிலைக்கு மின்விளக்கு போடப்படாமல் இருளடைந்து கிடந்துள்ளது. ஆனால் அருகிலுள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை, மின்விளக்கு அலங்காரங்கள் நடநு்து கொண்டுள்ளன.
குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை உரிய பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் pic.twitter.com/dMVA6du0RR
— Dr Ravikumar M P (@WriterRavikumar) January 19, 2020
இந்த பாரபட்சம் வேதனை அளிக்கிறது. தாங்கள் தலையிட்டு இந்தக் குறைகளைக் களையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் ரவிக்குமார்.












Click it and Unblock the Notifications