உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல மோடி தான் - தாராபுரத்தில் ஓபிஎஸ் புகழாரம்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. எனவே, நீங்கள் கூறுவதுபோல் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல, பிரதமர் மோடி தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை : காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தினை அடுத்து அதிமுக அரசின் கோரிக்கையை ஏற்று அதை நீக்கியர் பிரதமர் மோடி. அவர்தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 13 தொகுதி வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைத்து பேசினார் பிரதமர் மோடி.

வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டு அனைவரையும் பேச அழைத்தார் பாஜக மாநில தலைவர் எல். முருகன். மோடி பேசுவதற்கு முன்பாக பேசிய துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அதிமுக அரசு பத்தாண்டுகளாக செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.
தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அறிமுகம் செய்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், மத்திய காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான், நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதனை நீக்க அதிமுக அரசு கோரிக்கை வைத்த அன்றே, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. எனவே, நீங்கள் கூறுவதுபோல் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல, பிரதமர் மோடி தான் என்றார். உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்று புகழாரம் சூட்டினார் ஓ.பன்னீர் செல்வம்.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications