போலி பத்திரம் புகார் இனி வராது! "வீடியோ செக்!" தமிழக பத்திரப்பதிவு துறை அசத்தல்! மெசேஜ் வந்துருக்கா?
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பத்திரப்பதிவு துறை பல்வேறு அறிவிப்புகளை செய்து வருகிறது.. அந்தவகையில், இப்போதும் ஒரு அதிரடி நடைமுறையை கையில் எடுத்துள்ளது.
தமிழக பத்திரப்பதிவு துறையை பொறுத்தவரை, நிறைய முறைகேடுகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.. அதாவது, நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது என்பதால், போலி பத்திரங்களை தயார் செய்து, மோசடிகள் அதிகரித்துவிட்டன. இந்த போலி பத்திரத்தை பார்த்தால், அப்படியே நிஜ பத்திரிகைபோலவே இருக்கிறதாம்.

ஆள் மாறாட்டம்: ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம், பத்திரப்பதிவுகள் நடப்பது கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. காரணம், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
ஆனால் இந்த நடைமுறையும் மாறிவிட்டது.. இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. போலி பத்திரம் பதிவாகிவிட்டால், பதிவாளரே முன்வந்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்ப சட்டதிருத்தமாகும்.
பத்திரப்பதிவு: அதுமட்டுமல்ல, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? நிலத்தின் உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியையும் தமிழக அரசு ஆன்லைனில் செய்து தந்துள்ளது. அப்படியிருந்தும்கூட, போலி பட்டா தயாரிப்புகளும், மோசடி ஆவணங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது தமிழக பத்திரப்பதிவு துறை. சொத்துக்களை நீங்கள் பத்திரப்பதிவு செய்தால், அந்த பத்திரப்பதிவு நடந்ததை, அதை வீடியோ மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப் போகிறதாம்.
வீடியோ பதிவு: அதாவது, நீங்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து, பத்திரங்களை முறையாக பதிவு செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும்வரை அனைத்துமே அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியில் அனைத்துமே வீடியோவாக பதிவாகிவிடும்.
இந்த வீடியோ பதிவினை, சம்பந்தப்பட்டவர்களுக்கு வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். இந்த வீடியோவை, MX PLAYER,VLC PLAYER என்ற ஆப்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Mini player செயலியை டவுன்லோடு செய்து ஒலி, ஒளியுடன் காணலாம்.
நம்பிக்கை: இதன்மூலம், யாருடைய சொத்தையும் யாரும் உரிமை கொண்டாட முடியாது.. சொத்தை விற்பனை செய்துவிட்டு, அதை நான் விற்கவில்லை, போலி கையெழுத்து போட்டுவிட்டார்கள் என்று சொல்வதை இனி தடுக்க முடியும். வீடியோவை எடுத்து போட்டு காட்டி நீங்கள்தானே விற்றீர்கள் என்று பதிவுத்துறையினர் கேட்க முடியும். அந்தவகையில், இந்த வீடியோ ஆதாரம் மிகுந்த பலனை பெற்றுத்தரும் என்கிறார்கள் பதிவுத்துறை அதிகாரிகள். பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications