கொரோனா வார்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு தொற்று இல்லை.. உறவினர்கள் ஆவேசம்
சென்னை: மதுரவாயலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் ஆவேசமடைந்தனர்.
Recommended Video
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் செல்வி (48). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று ஏற்பட்ட மன உளைச்சலால் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா இல்லை என மருத்துவ முடிவுகள் வந்தது. இதையடுத்து அவரது உடலை எடுத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியதால் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் பின்னர் ஆம்புலன்சில் இருந்த செல்வியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தனர். அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் கொரோனா இல்லாமலேயே கொரோனா இருப்பதாக கூறி அழைத்து சென்று இப்படி சடலமாக கொண்டு வந்து போட்டு விட்டனரே என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு இறந்தபின் கொரோனா இல்லை என மருத்துவ அறிக்கை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications