எங்க ஏஜெண்டை துரத்திட்டு “கள்ள ஓட்டு” போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
சென்னை: தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆங்காங்கே ஒருசில இடங்களில் பதற்றம் நிலவினாலும், அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்: இந்நிலையில் தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், "தென்சென்னை தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜெண்ட்டுகளை தாக்கிவிட்டு திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.
கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார்: மேலும், மயிலாப்பூர் 122ஆவது வட்டத்தில் 13ஆவது வாக்குச்சாவடியில் எங்கள் பூத் ஏஜெண்ட்டுகளை வெளியே அனுப்பிவிட்டு 50 பேர் புகுந்து கள்ள ஒட்டு போட்டுள்ளனர். தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்." என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “இதேபோல தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் கள்ள ஓட்டு போட முயற்சிகள் நடந்துள்ளன. எங்கள் நிர்வாகிகள் அதனை தடுத்துள்ளனர். தியாகராயர் நகரில் சில வாக்குச்சாவடிகளில் நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன” என்றார்.
பாஜக ஆதரவாளர்கள் பெயர் நீக்கம்: மேலும், பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இல்லை என்பது மிகவும் வலி நிறைந்தது. வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, “ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. தேர்தலுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்தவித பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 % வாக்குகளை பதிவு செய்யலாம்.
தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை: வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும். பல்வேறு பிரச்சனை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் தேர்தலை சுமுகமாக நடத்தி உள்ளதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர், தங்கள் தொகுதியில் தலா 1 லட்சம் வாக்காளர்கள் பெயரை நீக்கி விட்டதாகவும், மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications