அடச்சீ.. ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு நிர்வாணமாக்கி.. கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கட்டிப்போட்டு நிர்வாணமாக்கி வீடியோ எடுத்ததுடன், வீட்டில் இருந்த 40 பவுன், பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள் கொள்ளையர்கள்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவில் கங்கா என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியான இவர் கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மகாதேவன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர், திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கங்கா வீட்டுக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளார்கள், வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். கதவை பாதி திறந்த நிலையில் கங்கா பதில் சொல்லி கொண்டிருந்திருக்கிறார்.

கட்டிப்போட்டனர்
இந்நிலையில் மர்ம நபர்கள் கங்காவிடம் பேசியபடியே திடீரென கதவை திறந்து கொண்டு அதிரடியாக வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள். பின்னர் கங்காவை கத்தியை காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள். பின்பு வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளார்கள்.

மர்ம நபர்கள்
கங்காவின் கையை கத்தியால் வெட்டிய மர்மநபர்கள், மூதாட்டி என்றும் பாராமல் அவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்துள்ளார்கள்.அத்துடன் இதை பற்றி போலீசில் புகார் செய்தால் அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மூதாட்டியை மிரட்டி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்கள்.

அரும்பாக்கம் போலீஸ்
அவர்கள் அங்கிருந்து போன பின்னர் கங்கா கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் ஓடிவந்தார்கள். கங்கா கட்டிப்போட்ட நிலையில், ஆடையின்றி இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

கடன் வாங்கினாரா?
சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கங்காவின் மகன் மகாதேவன், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கி இருக்கிறார். மேலும் அவர் நடத்தி வரும் நிறுவனத்தில் தொழில் போட்டி இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
எனவே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அவருடைய மகனை தேடி வந்தார்களா?

பெரும் பரபரப்பு
அப்படி வந்தவர்கள் வீட்டில் மகாதேவன் இல்லாததால் கங்காவை வீடு புகுந்து கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அவரை அவமானப்படுத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சென்னை அரும்பாக்கம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications