ஜெயிலுக்கு எப்படி போறது.. பணத்தை பறிகொடுத்தவரிடமே வழி கேட்ட திருடர்கள்.. சென்னையில் கலகல!
சென்னையில் பணத்தை பறிகொடுத்த நபரிடமே, அவரிடம் கொள்ளையடித்த திருடர்கள் வழி கேட்டு மாட்டிக்கொண்டது வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் பணத்தை பறிகொடுத்த நபரிடமே, அவரிடம் கொள்ளையடித்த திருடர்கள் வழி கேட்டு மாட்டிக்கொண்டது வைரல் ஆகியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உள்ள புதுப்பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பாஷா என்பவரிடம் இருந்து நேற்று திருடர்கள் கொள்ளையடித்து இருக்கிறார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அல்லா பாஷா அவரது நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு வரும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் தப்பி ஓடிய திருடர்கள் பூஞ்சேரி அருகே டீ குடித்தபடி நின்றுள்ளனர்.
அதே கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார் அல்லா பாஷா. இந்த நிலையில் அந்த திருட்டு கும்பல் அல்லா பாஷா மற்றும் அவரின் நண்பர்களிடமே சென்று, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வழி கேட்டு இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் தெரியாமல் வழி கேட்டுள்ளனர்.
உடனே சுதாரித்த அல்லா பாஷா அந்த திருடர்களை பிடித்துள்ளார். இரண்டு திருடர்கள் மட்டும் தப்பித்து ஓடி உள்ளனர். உனக்கு வழிதானே வேண்டும் வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று வழி காட்டி இருக்கிறார் அல்லா பாஷா. அந்த திருடர்கள் பெருங்குடியை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
போலீசார் தற்போது இவர்களை விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications