ஜெயிலுக்கு எப்படி போறது.. பணத்தை பறிகொடுத்தவரிடமே வழி கேட்ட திருடர்கள்.. சென்னையில் கலகல!

சென்னையில் பணத்தை பறிகொடுத்த நபரிடமே, அவரிடம் கொள்ளையடித்த திருடர்கள் வழி கேட்டு மாட்டிக்கொண்டது வைரல் ஆகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெயிலுக்கு எப்படி போறது.. சென்னையில் திருடர்கள் கலகல!- வீடியோ

    சென்னை: சென்னையில் பணத்தை பறிகொடுத்த நபரிடமே, அவரிடம் கொள்ளையடித்த திருடர்கள் வழி கேட்டு மாட்டிக்கொண்டது வைரல் ஆகியுள்ளது.

    காஞ்சிபுரம் அருகே உள்ள புதுப்பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பாஷா என்பவரிடம் இருந்து நேற்று திருடர்கள் கொள்ளையடித்து இருக்கிறார்கள். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    Robbers asked address to the same victim they assaulted, get arrested

    அல்லா பாஷா அவரது நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு வரும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் தப்பி ஓடிய திருடர்கள் பூஞ்சேரி அருகே டீ குடித்தபடி நின்றுள்ளனர்.

    அதே கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார் அல்லா பாஷா. இந்த நிலையில் அந்த திருட்டு கும்பல் அல்லா பாஷா மற்றும் அவரின் நண்பர்களிடமே சென்று, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வழி கேட்டு இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் தெரியாமல் வழி கேட்டுள்ளனர்.

    உடனே சுதாரித்த அல்லா பாஷா அந்த திருடர்களை பிடித்துள்ளார். இரண்டு திருடர்கள் மட்டும் தப்பித்து ஓடி உள்ளனர். உனக்கு வழிதானே வேண்டும் வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று வழி காட்டி இருக்கிறார் அல்லா பாஷா. அந்த திருடர்கள் பெருங்குடியை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    போலீசார் தற்போது இவர்களை விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+