மைக் தூக்கி எறிந்த நிகழ்வு.. பார்த்திபன் போன் செய்தார்.. கண் கலங்கினேன்.. நடந்தது என்ன? ரோபோ சங்கர்
சென்னை: இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்தது குறித்து ரோபோ சங்கருக்கு ஆர் பார்த்திபன் போன் செய்துள்ளார்.
இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். அவர் முதல் பாடலை வெளியிட்டார்.
இந்த படத்தை இயக்கியவர் ஆர் பார்த்திபன். நிகழ்ச்சியின் போது ஏ.ஆர் ரஹ்மான் பேசுகையில் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும்.

திரைக்கலைஞர்கள்
தமிழ் திரைக் கலஞைர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்றார். அப்போது இயக்குநரும் நடிகுமான பார்த்திபன் பேசுவதற்கு முற்பட்டார். அப்போது அந்த மைக் கோளாறால் வேலை செய்யாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து சென்று அந்த மைக்கை வீசி எறிந்தார்.

தூக்கி எறிந்த மைக்
இதை சற்றும் எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் சம்பவத்தை சுதாரிக்க சில நிமிடங்கள் ஆனது. அதிலும் பார்த்திபன் தூக்கி எறிந்த மைக், ரோபோ சங்கர் மீது விழுந்தது மேலும் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரோபோ சங்கர் கூறுகையில் ஒட்டுமொத்த விழாவையும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே கவனித்து வந்தார்.

டென்ஷன்
மைக் பிரச்சினையானதால் அந்த நேரத்தில் சற்று டென்ஷனாகிவிட்டார். இதற்காக போனில் என்னிடம் பல முறை மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதை கேட்டு நானே கண் கலங்கி விட்டேன். அப்படி சொல்லாதீங்க, நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றேன். நிஜத்தில் பழகுவதற்கு இனிமையான நபர் பார்த்திபன்.
Recommended Video

புண்படுத்தாதவர்
யாரையும் புண்படுத்தாத ஒரு நல்ல மனிதர். இந்த படத்தில் நான் நடித்துள்ளேன். இந்த படம் ஒட்டுமொத்த விருதையும் குவிக்க போகிறது. உலகமே திரும்பி பார்க்க போகும் ஒரு படமாக இருக்க போகிறது என ரோபோ சங்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications