"ஹிந்தி கால்.." தயாநிதி மாறன் வங்கி கணக்கிலிருந்து சட்டென மாயமான பணம்.. என்ன ஒரு ஃப்ராடுத்தனம்
சென்னை: திமுக எம்பி தயாநிதி மாறன் மனைவியின வங்கிக் கணக்கிலிருந்து ரூ 1 லட்சம் பணத்தை சுருட்டிய வடமாநில கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை ஆர்.ஏ.புரம் போர்ட் கிளப் பகுதியில் வசித்து வரும் தயாநிதி மாறன் எம்பி நேற்றைய தினம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திமுக எம்பியாக உள்ளேன். நானும் என் மனைவி பிரியாவும் சேர்ந்து ஜாயின்ட் அக்கவுன்ட்டை கோபாலபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் சேமிக்கு கணக்காக வைத்துள்ளோம்.

கடந்த 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மலேசியாவிலிருக்கும் என் மனைவிக்கு தெரியாத செல்போன் எண்களில் இருந்து 3 தடவை போன் வந்துள்ளது. அதில் ஹிந்தி மொழியில் பேசியவர்கள் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ 99,999 பண பரிவர்த்தனை உங்களால் செய்யப்பட்டதா என கேட்டுள்ளனர்.
எனது மனைவி எந்தவித ஓடிபி நம்பரையும் கொடுக்காத நிலையில் எங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 99,999 ஒரே தடவையாக எடுக்கப்பட்டுவிட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. எனவே சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
OUR PRIVATE DATA IS NOT SAFE IN #DigitalIndia!
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) October 10, 2023
On Sunday, ₹99,999 was stolen from my @AxisBank personal savings account through a net banking transfer via @IDFCFIRSTBank-@BillDesk, bypassing all normal safety protocols.
An OTP, the standard protocol for such transactions, was…
மேலும் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் தன்னுடையது தான் என்றும் தனது மனைவியின் செல்போன் எண் இல்லை என்றும் புகாரில் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவுக்கு புகாரை அனுப்பி வைத்தார்.
அதன் பேரில் தயாநிதிமாறன் மனைவிக்கு வந்த செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் ஹிந்தி மொழியில் பேசியதாக அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த மோசடியாளர்கள் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அப்படியிருக்கும் போது ஓடிபி சொல்லாமல் எப்படி பணம் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications