அருமை.. நம்மாழ்வர் இயற்கை ஆராய்ச்சி மையம்.. இயற்கை வேளாண்மைக்கு ரூ.400 கோடி! பட்ஜெட்டில் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழகத்துக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிக்க நம்மாழ்வர் இயற்கை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசு நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
Recommended Video
தமிழ்நாடு சட்டப்பேரவை - வேளாண்மை பட்ஜெட் - 2022 - 23
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications