விவசாய இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி! பட்ஜெட்டில் ஒதுக்கீடு
சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு டான்ஜெட்கோவுக்க ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்துக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

Recommended Video
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக டான்ஜெட்கோவுக்க ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விதை முதல் விளை பொருட்கள் வரை டிஜிட்டல் முறையில் விவசாயம் மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் டிஜிட்டல் விவசாயத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கான மின்னணு வேளாண் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர் திட்டத்துக்கான பரிந்துரை, பூச்சி, நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications