இளைய தளபதி இந்த பேட்டிக்கு என்ன காரணம்?.. உதயநிதியை விமர்சித்த பாஜக நிர்வாகி எஸ் ஆர் சேகர்
சென்னை: இளைய தளபதி ஏன் இப்படி இறங்கி வந்துட்டீங்க என சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதியை பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை கொடுக்க போகிறார்கள். அதற்காகதான் இவ்வாறு மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் என இளையராஜாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இளையராஜா
திமுக கூட்டணி கட்சிகள் இளையராஜாவை விமர்சித்திருந்த நிலையில் அவர் குறித்து திமுக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சேப்பாக்கம் தொகுதிக்கு வந்த உதயநிதி செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்
பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது அவருடைய சொந்த கருத்து.

முதல்வர் ஸ்டாலின்
இதில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். யாரையும் அநாகரிகமான முறையில் விமர்சிக்கக் கூடாது. இளையராஜாவை மட்டும் அல்ல யாரை அநாகரிகமாக விமர்சித்தாலும் அது தவறுதான் என உதயநிதி கூறியிருந்தார்.

எஸ் ஆர் சேகர் ட்வீட்
இதுகுறித்து எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இளைய தளபதி ஏன் இப்டி இறங்கி வந்துட்டீங்க! சிந்து சமவெளி நாகரீகம் படிச்சிருக்கோம். உங்கள் நாகரீகத்தை தான் தினசரி பாக்குறோமே. இந்த பேட்டிக்கு காரணம் அடி ரொம்ப பலமோ? உங்களுக்கு எதிர்வினை தவிர எந்த languageல் சொன்னாலும் புரியாதே அதனால் தான் என விமர்சனம் செய்துள்ளார்.

புத்தகத்திற்கு முன்னுரை
புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதிய நிலையில் அதுகுறித்த சர்ச்சை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து தான் கூறிய கருத்துகளை திரும்ப பெற மாட்டேன் என்றும் பதவிக்காக நான் யாரையும் புகழவில்லை என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications