100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் அதிரடி உயர்வு.. வெளியான குட்நியூஸ்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கான ஊதியம் ரூ.17 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலை செய்ய முடியும்.

கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் என்பது உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க இந்த திட்டம் உதவி செய்கிறது.
குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, ரோடு அகலப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை என்பது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு குட்நியூஸை வழங்கி உள்ளது மத்திய அரசு. அதாவது 2025-26ம் ஆண்டுக்கான 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.319 ஆக உள்ளது. தற்போது ரூ.17 வரை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு நாளைக்கான ஊதியம் என்பது ரூ. 319ல் இருந்து ரூ.336 ஆக உயர உள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு என்பது ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய கிராம மேம்பாட்டு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு என்பது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபட்டு வருகிறது. குறைந்தபட்சம் 2.33 சதவீதம் முதல் 7.48 சதவீதம் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் குறைந்தபட்சம் ரூ.7 முதல் ரூ.26 வரை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை எடுத்து கொண்டால் 5.33 சதவீதம் ஊதிய உயர்வாக ரூ.17 வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆந்திரா, அருணாச்சல பிரேதசம், அசாம், நாகலாந்து மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தலா 7 வரை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் 100 நாள் வேலை திட்டம் சம்பளம் என்பது ரூ.400யை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications