ரிப்பன் பில்டிங் அருகே போலீசார் குவிப்பு.. சற்று நேரத்தில் தூய்மை பணியாளர்கள் அகற்றம்?
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை வெளியே தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நடப்பதாகவும், எனவே, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனையடுத்து ரிப்பன் மாளிகை வெளியே நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மறுபுறம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் 15 மண்டலங்கள் இருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தூய்மை பணிகள் காண்ட்ராக்ட் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மண்டலம் 5,6 ஆகியவற்றில் பணியாற்றும் சுமார் 1953 தூய்மை பணியாளர்களை கான்டிராக்ட் பணியாளர்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள், பெருநகர மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளாக தூய்மை பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் எங்களை பணியிலிருந்து நீக்கும் அபாயம் இருக்கிறது. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணி காலம் காலத்திற்கும் இருக்கும். இப்படியான நீண்ட கால பணிகளை தனியார்மயத்திற்கு கொடுப்பது ஏற்புடையதல்ல. எனவே மாநகராட்சியே இந்த பணியை ஏற்று நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோருடன் போராட்டக்குழுவினர் பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண்.285ல் ஊராட்சிகள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டும் போராட்டக்குழுவினர், எங்கள் கோரிக்கைகளை உடனடியாக அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், போராட்டம் நடத்த அனுமதி பெறாமல் ரிப்பன் மாளிகை வாசலில் சட்டவிரோதமாக தூய்மை பணியாளர்கள் போராடி வருவதாகவும், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவ்வாறே தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த அனுமதித்தது. இதனையடுத்து, அவர்களை அப்புறப்படுத்த நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு












Click it and Unblock the Notifications