சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த சாம்பிராணி புகை போடுங்கள்.. கொரோனா வீட்டு பக்கமே தலைவச்சுக் கூட படுக்காது.. சஞ்சீவி சுவாமி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவுக்கு சித்த மருத்துவம் சிறந்தது என்றும் இவற்றை பருகினால் எந்த வைரஸும் தாக்காது என்றும் சஞ்சீவி ராஜா சுவாமிகள் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    இந்த சாம்பிராணி புகை போடுங்கள்.. கொரோனா வீட்டு பக்கமே தலைவச்சுக் கூட படுக்காது.. சஞ்சீவி சுவாமி

    கொரோனாவுக்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் எதை தின்றால் பித்தம் தணியும் என்று மக்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஒரு பக்கம் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மற்றொரு பக்கம் சித்த மருத்துவர்களும் தங்களுக்கு தெரிந்த வைத்தியங்களை சொல்லி வருகிறார்கள். சிலர் நிலவேம்பு கசாயமே அனைத்து வைரஸ் காய்ச்சல்களுக்கும் சிறந்தது என்கிறார்கள்.

    எந்த வகை

    எந்த வகை

    இந்த நிலையில் சஞ்சீவி ராஜா சுவாமிகள் கூறிய கொரோனா வைரஸுக்கான மருந்து மற்றும் மூலிகை புகை ஆகியவை அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதே மருத்துவத்தை இவர் நிஃபா வைரஸ் வந்த போதும் கூறினாராம். அவர் தனது வீடியோவில் கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்து நான் இத்தனை நாட்கள் பேசாமல் இருந்ததற்கு காரணம் அது எந்த வகையை சார்ந்தது, எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது.

    நுரையீரல்

    நுரையீரல்

    இந்தியாவை பொருத்தவரை இந்த கொரோனாவின் பாதிப்பு என்பது 80 சதவீதம் இருக்காது. அச்சம் கொள்ள வேண்டாம். ஏற்கெனவே நிஃபா வைரஸ் வந்த போதும் நான் ஒரு கசாயத்தை செய்து சாப்பிடுமாறு கூறியிருந்தேன். அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த கசாயம் வைரஸை தடுக்கும் வைரஸை நீக்கும் என்பதை காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா வைரஸால் நுரையீரல் தாக்கம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். சுவாச கோளாறு, சிறுநீரக கோளாறு, தொண்டை வலி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என கூறுகிறார்கள்.

    மருந்து என்ன

    மருந்து என்ன

    இதனால் உயிரிழப்பும் நடைபெறுவதாக கூறுகிறார்கள். சுக்கு, நன்னாரி வேர், கொத்தமல்லி இலை, தூதுவளை இலை, தும்பை இலை, தேசாவரம் (திப்பிலி) ஆகியவற்றால் ஆன கசாயத்தை சாப்பிட வேண்டும். தும்பை, கொத்தமல்லி, தூதுவளை இவையெல்லாம் ஒவ்வொரு பிடி எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல அழுத்தமான பிடி எடுத்துக் கொள்ளவும் மற்றவை உள்ளங்கை பிடி எடுத்துக் கொள்ளவும்.

    சிறு தீ

    சிறு தீ

    அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வையுங்கள். அது கொதிக்கும் போது இலைகளை அப்படியே போட்டுவிட்டு திப்பிலி உள்ளிட்டவற்றை ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்க்க வேண்டும். அடுப்பை சிறு தீயில் வைத்து அந்த தண்ணீர் 250 எம்எல்லாக சுண்டும் அளவுக்கு கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடுங்கள்.

     சாம்பிராணி புகை

    சாம்பிராணி புகை

    நோய் இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில்லை. மற்றவர்கள் சாப்பிட்டாலும் இது சக்தியாகிறது. அகில் கட்டை, முகில் கட்டை, கருங்காலி, தேவதாறு, மரமஞ்சள் ஆகியவை ஐந்தையும் எரித்து புகைமூட்டி சாம்பிராணி புகை போல் வீடுகளில் இரு வேளைகளில் போட வேண்டும். இந்த புகை போட்டால் எந்த கிருமியும் வராது. இது போட்டால் கிருமி போகுமா என கேட்டால் என்னிடம் ஆதாரம் கிடையாது. வேண்டுமென்றால் சோதனை செய்து பாருங்கள் என்றார்.

    English summary
    Sanjeevi Raja Swamigal advises to drink kasayam and Sambirani smoke for protecting from Corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X