நள்ளிரவு 2 மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார்.. அப்படியே அண்ணாமலைக்கும் போன்.. ஒரு திகில் அனுபவம்
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதற்கு முன்பு என் மனைவியிடம் கேட்டுவிட்டுதான் செய்தேன் என நடிகரும் பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவருமான சரத்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சியை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கலைத்துவிட்டு பாஜகவில் தன்னையும் அதன் நிர்வாகிகளையும் சரத்குமார் இன்று இணைத்துக் கொண்டார்.

அப்போது சரத்குமார் பேசுகையில் பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. நாட்டின் வளர்ச்சிக்காகவும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி காமராஜரை போல் ஆட்சி நடத்துகிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில் நள்ளிரவு 2 மணி இருக்கும். அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர், நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பிறகு அண்ணாமலைக்கு போனை போட்டு தகவல் சொன்னேன். இவ்வாறு சரத்குமார் சீரியஸ் தொனியில் தெரிவித்தார்.
காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்தீங்களா? அன்று கரு நாகராஜன்.. இன்று சரத்குமார்!
இதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, சரத்குமார் தேசியத்திற்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்திற்குள் அடைத்து வைக்கக் கூடாது என்று கூறினார். சரத்குமார் தான் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திமுகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். இந்த கட்சி 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் வென்றனர்.
அதன் பின்னர் உட்கட்சிப் பூசலால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் பாஜக சார்பில் களம் காண்பார் என்றே தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications