Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நள்ளிரவு 2 மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார்.. அப்படியே அண்ணாமலைக்கும் போன்.. ஒரு திகில் அனுபவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதற்கு முன்பு என் மனைவியிடம் கேட்டுவிட்டுதான் செய்தேன் என நடிகரும் பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவருமான சரத்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு தொடங்கிய சமத்துவ மக்கள் கட்சியை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கலைத்துவிட்டு பாஜகவில் தன்னையும் அதன் நிர்வாகிகளையும் சரத்குமார் இன்று இணைத்துக் கொண்டார்.

Sarathkumar says that he asked his wife about merger of his party with BJP

அப்போது சரத்குமார் பேசுகையில் பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. நாட்டின் வளர்ச்சிக்காகவும் வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி காமராஜரை போல் ஆட்சி நடத்துகிறார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில் நள்ளிரவு 2 மணி இருக்கும். அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர், நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என கூறினார். பிறகு அண்ணாமலைக்கு போனை போட்டு தகவல் சொன்னேன். இவ்வாறு சரத்குமார் சீரியஸ் தொனியில் தெரிவித்தார்.

காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்தீங்களா? அன்று கரு நாகராஜன்.. இன்று சரத்குமார்!

இதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, சரத்குமார் தேசியத்திற்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்திற்குள் அடைத்து வைக்கக் கூடாது என்று கூறினார். சரத்குமார் தான் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திமுகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.

இதையடுத்து 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். இந்த கட்சி 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் வென்றனர்.

அதன் பின்னர் உட்கட்சிப் பூசலால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் பாஜக சார்பில் களம் காண்பார் என்றே தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+