40 நாள் பிளான்.. ஃபோனால் மாட்டிய பரிதாபம்.. விஜய் ரசிகர்களை போலீஸ் பிடித்தது எப்படி?
அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்களை போலீஸ் எப்படி பிடித்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்களை போலீஸ் எப்படி பிடித்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி வெற்றி அடைந்தது. இந்த படத்தில் அதிமுகவிற்கு எதிராக சில வசனங்களும் காட்சிகளும் இருந்தது. இதனால் விஜய் ரசிகர்களுக்கும், அதிமுகவினரும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
அதன்பின் சர்கார் படத்தில் இருக்கும் சில மோசமான காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்டது.

வீடியோ வெளியிட்டார்
இதையடுத்து, விஜய் ரசிகர்கள் இருவர், அதிமுகவினருக்கும், ஆளுங்கட்சிக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் நாங்கள் நினைத்தால் கொலை கூட செய்வோம் என்பது போல மிரட்டல் விடுத்து இருந்தனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் போலீஸ் அவர்களை இப்போதுதான் கைது செய்துள்ளது. அவர்கள் சிக்கிய கதையே மிகவும் சுவாரசியமானது.

ஜாமீன்
முதலில் போலீஸ் இவர்களை யார் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில்தான் அந்த வீடியோவில் இருக்கும் நபர்களின் ஒருவரான ஆவடியை சேர்ந்தவர் லிங்கத்துரை, இந்த வழக்கில் கைதாக கூடாது என்பதால் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். எந்த க்ளூவும் கிடைக்காமல் இருந்த போலீஸ் இந்த முன்ஜாமீன் தாக்கல் செய்த விவரத்தை வைத்து லிங்கத்துரையின் போன் நம்பரை கண்டுபிடித்தது.

நண்பர்கள் மாட்டினார்கள்
இந்த போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீசின் உதவியுடன், லிங்கத்துரையின் கால் ஹிஸ்டரி எடுக்கப்பட்டு இருக்கிறது. அதை வைத்து அவர் எங்கே வேலை பார்த்தார் என்று கண்டுபிடித்து அங்கே சென்று விசாரித்து இருக்கிறார்கள். அதோடு அவர் வசிக்கும் தெருவிலும் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதில் அந்த வீடியோவில் இருந் இன்னொரு நபரும், வீடியோவை எடுத்த நபரும் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மூவரையும் கைது
அங்கு திரட்டிய தகவல்களை வைத்து வீடியோவில் இருந்த இன்னொரு சிறுவனையும் (17 வயது) , அனிஷேக் என்று வீடியோ எடுத்த இளைஞனையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, கடைசியாக லிங்கத்துரையும் கைது செய்யப்பட்டார். லிங்கத்துரை ஜாமீன் மனுவில் போலியான விலாசம் கொடுத்த காரணத்தால் அவரது முன்ஜாமீன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

மாஸ்டர் வேலை
இவர்களை பிடிக்க தமிழக போலீஸ் கிட்டத்தட்ட 40 நாட்கள் கஷ்டப்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் புழல் சிறையிலும், 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications