அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா இன்று ஆஜராகவில்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா இன்று காணொலி காட்சி மூலம் ஆஜராவில்லை.
ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இன்று காணொலி மூலம் ஆஜராகுமாறு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எழும்பூர் நீதிமன்ற்ம உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு ஆஜரானார்.
ஆனால் சசிகலா ஆஜராகவில்லை. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் கணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications