விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்... ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்... சசிகலா அதிரடி பேச்சு!
சென்னை: புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று சசிகலா கூறினார்.
Recommended Video

தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது . இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நானும் உங்களுக்கு துணை இருப்பேன் என்றும் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.
சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சசிகலா விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு ஜெயிலில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து சில வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். பெங்களூரு முதல் சென்னை வரை அவருக்கு வரலாறு காணாத வரவேற்பை அமமுக தொண்டர்கள் கொடுத்தனர். சசிகலா சென்னை வரும் வேளையில் காரில் அதிமுக கொடி பொருத்தி இருந்தார்.

முதல்வர் தாக்கு
இதற்கு அதிமுகவினர் பல்வேறு கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகு முதல்வர் சசிகலாவை கடுமையாக தாக்கி பேசினார். அமைச்சர்கள் சிலரும் சசிகலாவை தாக்கினார்கள். டிடிவி தினகரனும் முதல்வர், அமைச்சர்களை பேசினார். சென்னை வந்த சசிகலா வீட்டுக்குளேயே இருந்தார். அவர் தொண்டர்களை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து வந்தது.

ஜெயலலிதா படத்துக்கு மரியாதை
இந்த நிலையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டப்படுகிறது. இதனால் சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். ஜெயில் தண்டனை முடிந்து சசிகலா பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுவாகும். அப்போது டிடிவி தினகரன், வெங்கடேசன், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அங்கு இருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா கூறியதாவது:-

ஒன்றாக இனணந்து தேர்தல் சந்திப்போம்
கொரோனாவில் இருந்த போது தமிழக மக்கள் கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன் அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் புரட்சித்தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம்.

ஜெயலலிதா இலக்கு
நம்முடைய இலக்கு நமது புரட்சித்தலைவி நமக்கு சொல்லி விட்டுச் சென்ற, மீண்டும் தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்பதே ஆகும். எனவே அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் .

விரைவில் தொண்டர்கள் சந்திப்பேன்
அதில் நாம் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது . இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் நானும் உங்களுக்கு துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என்று சசிகலா கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications