சசிகலா சந்திக்க போகும் முக்கிய தலைவர் இவரா?.. பரபரக்கும் தஞ்சை அதிமுக.. டென்ஷனில் ஈபிஎஸ்-ஓபிஎஸ்?
சென்னை: திருச்செந்தூர் ஆன்மீக பயணத்தின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜாவை சந்தித்தது போல் தஞ்சை ஆன்மீக பயணத்திலும் ஒரு முக்கிய தலைவரை சசிகலா சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா விட்டு சென்ற அதிமுக எனும் மாபெரும் இயக்கம், கஷ்டமே இல்லாமல் தனது கைகளுக்கு வர வேண்டும் என சசிகலா நினைப்பது நன்றாகவே தெரிகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது அவர் ஜெயலலிதா சமாதியில் 3 முறை அடித்து சத்தியம் செய்தார். அடுத்தது சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் நீக்கினர்.

விடுதலை
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விடுதலையாகி சசிகலா வெளியே வந்ததும் ஏதோ தரமான சம்பவம் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் அவர் எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக இருந்தார். அவ்வப்போது அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் பேசினார். அந்த ஆடியோ "லீக்கானது".

ஓராண்டு
இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்து ஓராண்டு ஆன நிலையில் தற்போது அதிமுகவை கையிலெடுக்க மெல்ல மெல்ல காய் நகர்த்தி வருகிறார் சசிகலா. இத்தனை நாட்கள் இரட்டை தலைமையின் செயல்பாடுகளை நடந்து முடிந்த தேர்தல்கள் வரை பார்த்த அவர் தற்போது தொடர் தோல்வியால் கட்சியை கையில் எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.

ஆன்மீக பயணம்
இதற்காக ஆதரவாளர்களை திரட்ட ஆன்மிக பயணம் என்ற பெயரில் முக்கிய இடங்களுக்கு செல்கிறார். ஆனால் அது பெரும்பாலும் அரசியல் பயணமாகவே இருக்கிறது. கடந்த 4ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலாவை திருச்செந்தூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜா சந்தித்து பேசினார்.

கட்சியிலிருந்து நீக்கம்
இதையடுத்து அடுத்த நாளே ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த பயணங்களில் சசிகலா எதிர்பார்த்த தலைகள் அவரை சந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் அப்செட்டில் இருந்த அவர் விமான பயணத்தை கேன்சல் செய்துவிட்டு சாலை மார்க்கமாகவே சென்னை திரும்பினார். ஆனாலும் பலனில்லையாம்.

இரண்டாம் கட்டம்
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக தஞ்சை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். செல்லும் வழியில் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில், மருவத்தூர் ஆதிபராசக்தி, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மயிலம் முருகன் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்கிறார்.

அதிமுகவில் பரபரப்பு
தஞ்சையில் இரு தினங்கள் தங்கும் அவர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தஞ்சை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரை சந்திக்கும் அளவுக்கு சசிகலாவின் முயற்சியை கண்டு அதிமுக இரட்டை தலைமை அப்செட்டிலும் டென்ஷனிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications