அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கட்சி மீது பற்றுக் கொண்டவர்.. விரைவில் நலம் பெற பிரார்த்தனை- சசிகலா
சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என சசிகலா பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
அதிமுகவின் அவைத் தலைவராக உள்ள மதுசூதனன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்றைய தினம் சசிகலா அப்பல்லோ சென்று நேரில் விசாரித்தார். அந்த சமயம் மருத்துவமனையின் வளாகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
சசிகலா வருவதை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்களிடம் அவசர அவசரமாக பேசிவிட்டு வெளியே வந்தார். பின்னர் சசிகலா உள்ளே சென்று மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக மீது மிகவும் பற்றுக் கொண்டவர் மதுசூதனன். அவர் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் சந்திக்க வந்தேன்.

இறைவன்
அவர் விரைவில் நல்ல உடல்நலம் பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக சசிகலா தெரிவித்தார். நேற்றைய தினம் ஓபிஎஸ் அப்பல்லோ வந்த நிலையில் இன்றைய தினம் ஒரே நேரத்தில் எடப்பாடியும் சசிகலாவும் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

ஜெயலலிதா
மதுசூதனன் எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வருகிறார். ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்த நாள் முதல் மதுசூதனன் அவைத் தலைவராக இருந்து வருகிறார். 2017இல் தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவர் அப்பதவியிலிருந்து சசிகலாவால் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications