சசிகலா வருகை.. புதுக்கட்டுப்பாட்டை விதித்தது சென்னை மாநகராட்சி.. அதிர்ச்சியில் அமமுகவினர்!
சென்னை: பெங்களூருவில் இருந்து நாளை சென்னைக்கு சசிகலா வருகை தர உள்ளார். இதையொட்டி அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
Recommended Video

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,
அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்த சசிகலா, மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒரு வாரம் பெங்களூருவில உள்ள பண்ணை வீட்டில் ஒய்வில் இருக்கிறார். ஒரு வார தனிமை நேற்றுடன் முடிந்த நிலையில், நாளை 8ம் தேதி சசிகலா சென்னை வருகிறார்.

ஜெயலலிதா கார்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சசிகலா சென்னைக்கு வருவது பெரும் எதிர்பார்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது அதிமுக கொடியையும், ஜெயலலிதாவின் காரையும் பயன்படுத்தியதால், அடுத்து சசிகலா என்ன செய்ய போகிறார் என்ற பரபரப்பு நிலவுகிறது.

அமமுக வரவேற்பு
இந்த சூழலில் நாளை சசிகலா சென்னை வரும் போது அவருக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் அமமுகவினர் வந்து உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஓசூர் முதல் சென்னை வரை பெரும் வரவேற்புடன் சசிகலாவை வரவேற்க அமமுகவினர் இப்போதே வாடகை கார், வேன்களை புக்கிங் செய்துவிட்டார்கள்.

டிடிவி தினகரன்
சசிகலாவை வரவேற்கும் விதமாக தமிழகத்தின் பல இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு தமிழக-கர்நாடகா எல்லையில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரகாஷ் எச்சரிக்கை
இந்நிலையில் சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் காரணமாக அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications