எல்லோரும் அடிச்சிக்கிறாங்க.. பார்த்திபனும் சொல்கிறார்.. இனியாவது செய்வோமே மக்களே!
சென்னை: மழை நீரின் ஒவ்வொரு துளியும் தேவாம்ருதமாக தெரிகிறது சென்னை மக்களுக்கு. அந்த அளவுக்கு படாதபாடு பட்டு விட்டார்கள் மக்கள். மரண பயத்தை காட்டி விட்டது இயற்கை.
தண்ணி இல்லாக் காடு என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது சென்னை. தண்ணீருக்காக குடம் குடமாக அலைந்து கொண்டுள்ளனர் மக்கள். வான் மழை பொய்த்ததால், பூமியில் நிலத்தடி நீர் வெகுவாக இறங்கிப் போய் குடிக்க சொட்டுத் தண்ணீருக்காக தெருத் தெருவாக அலையும் அவல நிலை.

புறநகர்களில் சற்று பரவாயில்லை. ஆனால் அங்கும் ஏரிகளை காலி செய்து பிளாட் போட்டு விற்று காசு பார்த்து விட்ட கபோதிக் கும்பலால், இன்று அங்கும் நிலத்தடி நீர் இறங்கிப் போய் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மழை நீரின் அருமை பெருமை மக்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ளது. நீர் நிலைகளை காக்க வேண்டும் என்ற அக்கறை கவலை வரத் தொடங்கியுள்ளது. இன்னும் கூட மக்கள் விழித்துக் கொண்டதாக தெரியவில்லை. பாதி அளவுக்குக் கூட மக்கள் விழிப்படையாமல்தான் உள்ளனர்.
இந்த நிலையில் சமீப காலமாக எப்படியெல்லாம் தண்ணீரை சேமிக்க முடியும் என்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகளைப் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதில் ஒன்றாகவே நடிகர் இயக்குநர் பார்த்திபனின் பதிவைப் பார்க்க முடிகிறது.
Please please please see the full video and forward it to maximum groups, Society, people . Urgent need of today. 🙏 pic.twitter.com/bGSHI9bdny
— R.Parthiban (@rparthiepan) June 29, 2019
இந்த இடத்தில் எப்படி மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாகாமல் சேகரிக்கிறார்கள் என்பதைக் காட்டும் வீடியோ அது. கொட்டும் மழையின் அத்தனை துளி நீரும் அழகாக ஒரு தொட்டிக்கு கொண்டு போய் சேகரிக்கப்படுகிறது.
இதை அனைவரும் பகிர்ந்து அனைவரும் இதுபோன்ற சேகரிப்பு முறைகளில் இறங்க வேண்டும் என்று பார்த்திபன் அதில் கோரியுள்ளார். பார்த்திபன் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும் என்று விரும்பும் யாரும் இதை தானாக முன்வந்து செய்வார்கள், செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கையும் கூட.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications